Type Here to Get Search Results !

காங்கிரஸ் புறக்கணிக்க வேண்டியது பத்திரிகையாளர்களை அல்ல... ராகுல் காந்தியை...!!! பா.ஜனதா

இந்தியா கூட்டணி 14 தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னேற்றம் காண வேண்டும் என்றால், ராகுல் காந்தியைத்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சம்பித் பத்ரா கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சி, அதன் சொந்த நலனுக்காக உண்மையிலேயே யாரையாவது புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால், அவருடைய பெயர் ராகுல் காந்தி. உங்களுடைய தலைவருக்கு வலிமை இல்லை. நீங்கள் யாரையெல்லாம் புறக்கணிப்பீர்கள்?. புறக்கணித்து, முன்னேற வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய தலைவரை புறக்கணியுங்கள்.

இந்தியாவில் எதிர்க்கட்சிகளால் தாக்கப்படாத அமைப்புகளே இல்லை. நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என அனைத்து அமைப்புகள் மேலும் தாக்குதல். காங்கிரஸ் கட்சி அன்பை பற்றி பேசுகிறார்கள். ஆனால் வெறுப்பை வீசுகிறார்கள். ஹிட் லிஸ்ட் பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டு, தாக்கப்படுவார்கள். அவர்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.

இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.