Type Here to Get Search Results !

ஜி20 மாநாட்டில் பங்கேற்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ல் இந்தியா வருகை - வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன்:

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது.

ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வரவுள்ளார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபர் பைடன் மற்றும் ஜி 20 தலைவர்கள் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள். சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.