Type Here to Get Search Results !

தவறான நடத்தையால் வெளியேற்றப்பட்ட நபர்- பழிவாங்க பாருக்கு தீ வைப்பு: 11 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் உள்ள பார் ஒன்றில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக வெளியேற்றப்பட்ட நபர் திரும்பி வந்து பாருக்கு தீ வைத்து எரித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீ விபத்ததில், ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, சோனோராவில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் கூறுகையில், பாரில் "பெண்களை அவமரியாதையாக நடத்தியதற்காக" அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் திரும்பி வந்து மறைமுகமாக மொலோடோவ் காக்டெய்ல் போன்ற எரியும் பொருளை வீசினார். இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது

தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.