Type Here to Get Search Results !

கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்டமுடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை:

கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல் மந்திரி சித்தராமையா, மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை கொண்டு வந்த போது நாங்கள் எதிர்த்தோம்.

கர்நாடக அரசு நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால் தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது.

மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம், அதுதான் நியதி என தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.