Type Here to Get Search Results !

புனேவில் உள்ள குடோனில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள ஐபோன்கள் திருட்டு- ஒருவர் கைது

புனே மாவட்டத்தில் உள்ள குடோனின் ஷட்டரை உடைத்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை திருடியதாக 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜார்க்கண்டை சேர்ந்த தோபாஜுல் குர்ஷித் ஷேக் என்றும் மும்பை காவல்துறையின் குற்றப் பிரிவின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்புப் பிரிவினரால் மஸ்ஜித் பந்தர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

தோபாஜூல் குர்ஷித் கடந்த ஜூலை 15ம் தேதி புனே அருகே வாகோலி பகுதியில் உள்ள குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து, குர்ஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.