Type Here to Get Search Results !

சொந்த மாநில அரசை விமர்சித்ததால் நடவடிக்கை- ராஜஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது.

பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானிலும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும், உண்மையில் ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அம்மாநில மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான ராஜேந்திர சிங் ஹதுடா விமர்சித்து பேசினார்.

தனது சொந்த மாநில அரசையே ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா விமர்சித்து பேசியதை அடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.